Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

''தங்கலான்'' படத்திற்குப் பிறகு ...பா.ரஞ்சித்தின் திடீர் முடிவு ஏன்?

''தங்கலான்'' படத்திற்குப் பிறகு ...பா.ரஞ்சித்தின் திடீர் முடிவு ஏன்?

sinoj

, வெள்ளி, 5 ஏப்ரல் 2024 (22:25 IST)
தங்கலான் படத்திற்கு பிறகு பா.ரஞ்சித் ஒரு படம் பண்ணுவதாக முதலில் தகவல் வெளியானது.
 
தங்கலான் என்ற பிரமாண்ட பட்ஜெட்டில் படம் எடுத்துவிட்டு, தற்போது சிறிய பட்ஜெட் படத்தை பா.ரஞ்சித் இயக்கும்  நிலையில், இப்படத்தில் அட்டகத்தி தினேஷ்  நடிப்பில் புதிய படத்தை இயக்கவுள்ளார்.
 
மேலும், இப்படம் சின்ன பட்ஜெட் படம் என்றாலும்,  பா.ரஞ்சித் இதற்கு முன் இயக்கிய படத்தில் நடித்த சில முக்கிய நடிகர்கள் இதில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.
 
ஏன் பா.ரஞ்சித் சிறிய பட்ஜெட் நடிக்கவுள்ளார் என கேள்வி எழுந்த நிலையில், இப்படத்திற்குப் பிறகு பெரிய பட்ஜெட் படமொன்றை இயக்கவுள்ளார் என்பதால் இப்படத்தை இயக்குவதன் மூலம் தன்னை கொஞ்சம் அவர் ரிலாக்ஸ் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது. 

பா. ரஞ்சித் இயக்கிய, தங்கலான் படத்தில் விக்ரம், மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சன்பிக்சர்ஸிடம் அடம்பிடிக்கும் லோகேஷ்?’ ரஜினி171’ படத்தில் அது நடக்குமா?