Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஷங்கர் ராம்சரண் படம் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்கள்… எஸ் ஜே சூர்யா அளித்த பதில்!

ஷங்கர் ராம்சரண் படம் பற்றி கேட்ட பத்திரிக்கையாளர்கள்… எஸ் ஜே சூர்யா அளித்த பதில்!
, வெள்ளி, 2 டிசம்பர் 2022 (16:44 IST)
கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ’இந்தியன் 2’ படம் தொடங்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் ரிலீஸாகவில்லை. படப்பிடிப்புத் தளத்தில் நடந்த விபத்துக் காரணமாக மூன்று பேர் உயிரிழந்ததை அடுத்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.

இதற்கிடையில் ஷங்கர் தற்போது ராம்சரண் மற்றும் கியாரா அத்வானி ஆகியோர் நடிக்கும் “RC 15” படத்தையும் இயக்கி வருகிறார். இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்கிறார்.

இந்நிலையில் வதந்தி என்ற வெப் சீரிஸின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட எஸ் ஜே சூர்யாவிடம் இந்த படம் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அப்போது அவர் “ இந்த படம் பற்றி பேச எனக்கு அனுமதி இல்லை. ஷங்கர் சார் எப்போதுமே தகவல்களை ரகசியமாக வைத்திருப்பார். கண்டிப்பாக வித்தியாசமான ஒரு படமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

''#30YearsOfVijayism'' வாரிசு பட அடுத்த அப்டேட் பற்றி படக்குழு தகவல் !