Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அமரன் படத்தின் அடுத்தகட்ட வேலைகளைத் தொடங்கிய சிவகார்த்திகேயன்!

அமரன் படத்தின் அடுத்தகட்ட வேலைகளைத் தொடங்கிய சிவகார்த்திகேயன்!

vinoth

, சனி, 7 செப்டம்பர் 2024 (08:10 IST)
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பில் உருவாகி வரும் அமரன் திரைப்படத்தின் தீபாவளியை முன்னிட்டு ரிலீஸாகவுள்ளது. இந்த திரைப்படம் சென்னையைச் சேர்ந்த மறைந்த கேப்டன் முகுந்த் வரதராஜனின் கதையைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது.

அமரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர் ஏராளமான காட்சிகள் படமாக்கப்பட்டது. அதை பொறுத்துவது போன்ற நிலவியலில் இப்போது இறுதிகட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்தது. இந்த படத்தில் முதலில் முதலீடு செய்த சோனி நிறுவனம், அதிக பட்ஜெட் காரணமாக இப்போது விலகிக் கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே வெளியிடவுள்ளது. படம் தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் இப்போது படத்தின் டப்பிங் பணிகளை சிவகார்த்திகேயன் தொடங்கியுள்ளாராம். அவர் தொடர்ந்து நான்கு நாட்கள் படத்துக்கான டப்பிங் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லியோவை விட கோட் படத்தின் முதல் நாள் வசூல் குறைந்ததின் பின்னணி என்ன?