Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமரனுக்கு நம்பிக்கை கொடுத்த பிதாமகன்… பாலா 25 நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி!

vinoth
வியாழன், 19 டிசம்பர் 2024 (08:31 IST)
இயக்குனர் பாலாவின் வணங்கான் படத்தின் இசை வெளியீடும், அவரின் 25 ஆண்டுகால திரைவாழ்க்கையைக் கொண்டாடும் நிகழ்வும் நேற்று சென்னையில் நடந்தது. இதில் சூர்யா, மணிரத்னம், மிஷ்கின் மற்றும் பாக்யராஜ் உள்ளிட்ட ஏராளமான திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டு பேசினார்.

விழாவில் பேசிய சிவகார்த்திகேயன் “அமரன் திரைப்படத்தில் எதிர்மறையானக் க்ளைமேக்ஸ் உள்ளது. தீபாவளி போன்ற பண்டிகை நாளில் ரிலீஸானால் ஓடாது என்றார்கள். அது சம்மந்தமாக எனக்குக் குழப்பமாக இருந்தபோது, பாலா சாரின் பிதாமகன் தீபாவளிக்கு வந்துதான் ஓடியது என்பது எனக்கு நம்பிக்கையாக இருந்தது. அவரைக் கொண்டாடுகிற விழாவில் நானும் இருப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது” எனக் கூறியுள்ளார்.

இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான வணங்கான் திரைப்படம் கிடப்பில் போடப்பட்ட நிலையில் அதன் பிறகு அந்த படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்தார். மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில், ரோஷினி ஹர்ப்ரியன், சமுத்திரக்கனி மற்றும் மிஷ்கின் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த  படத்தை இயக்குனர் பாலா மற்றும் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர். படம் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. ஜனவரி 10 ஆம் தேதி படம் ரிலீஸாகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரூ.7 கோடி பட்ஜெட்.. ரூ.75 கோடி வசூல்.. டூரிஸ்ட் பேமிலி கற்று கொடுத்த பாடம்..!

35 வருடத்திற்கு முன் விஜய்க்கு அக்கா.. ‘ஜனநாயகன்’ படத்தில் அம்மா.. சூப்பர் தகவல்..!

மரூன் கலர் உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!

வெட்கத்தில் சிவக்கும் கண்கள்… ஹன்சிகாவின் க்யூட் ஆல்பம்!

நா முத்துகுமார் குடும்பத்துக்கு உதவ இசைக் கச்சேரி… இயக்குனர்கள் எடுக்கும் முன்னெடுப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments