சிவகார்த்திகேயன் மறுத்த கதையில் நடிக்கும் கௌதம் கார்த்திக் – நவரசா அப்டேட்!

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (17:36 IST)
நவரசா ஆந்தாலஜி படத்தில் ஒரு கதையில் நடிக்க சிவகார்த்திகேயனை அனுகிய போது அவர் நடிக்க மறுத்து விட்டாராம்.

மணிரத்னம் இயக்கிவரும் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு 40 சதவீதம் முடிந்துள்ள நிலையில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில அவர் குறுகிய இடைவெளியில் குறைந்த பட்ஜெட் படம் ஒன்றை இயக்க இருக்கிறார்.  அதற்காக திரைக்கதை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அமேசான் ப்ரைம் தளத்துக்காக மணிரத்னம் ஒரு புராணத்தொடரை உருவாக்க இருக்கிறார். நவரசா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த தொடரில் 9 கதைகள் காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர்.

இந்நிலையில் இதன் ஒரு கதையை இயக்குனர் பொன்ராம் இயக்க உள்ளாராம். இந்த கதையில் சிவகார்த்திகேயன் நடித்தால் நன்றாக இருக்கும் என அவரை அனுகியுள்ளனர். ஆனால் சிவகார்த்திகேயன் மறுக்கவே இப்போது அந்த வாய்ப்பு கௌதம் கார்த்திக்கு சென்றுள்ளது. இயக்குனர் பொன்ராம் இப்போது படக்குழுவினருடன் கொடைக்கானலில் முகாமிட்டுள்ளாரம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments