Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நவம்பர் 25 ஆம் தேதி முதல் அயலான் படப்பிடிப்பு தொடக்கம்! வருவாரா ரகுல் ப்ரீத் சிங்!

Webdunia
திங்கள், 23 நவம்பர் 2020 (16:37 IST)
அயலான் திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை மறுநாள் முதல் தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிகுமார் இயக்கி வரும் அயலான் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று வேடத்தில் நடித்து வருவதாகவும் அதில் ஒரு வேடம் வேற்றுகிரக மனிதர் என்றும் இந்த வேடம் சிவகார்த்திகேயனுக்கு உண்மையாகவே வித்தியாசமான கெட்டப் ஆக இருக்கும் என்றும் அடையாளமே தெரியாத அளவில் இந்த வேடத்திற்காக வெளிநாட்டிலிருந்து மேக்கப்மேன் வரவழைக்கப்படுவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட காலமாக இழுத்துக்கொண்டே வந்தது. இடையில் தயாரிப்பாளர் ஆர் டி ராஜா மாறி கே ஜே ஆர் ஸ்டுடியோஸ் கைக்கு மாறியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட படப்பிடிப்பு இப்போது நாளை மறுநாள் தொடங்க உள்ளது. இதில் ரகுல் ப்ரீத் சிங் கலந்துகொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. போதைப் பொருள் வழக்கில் சிக்கிய பின்னர் அவர் எந்த படப்பிடிப்பிலும் கலந்துகொள்ள வில்லை என சொல்லப்படுகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம் செய்து கொண்டாரா? 2வது மனைவி 6 மாத கர்ப்பமா?

தேவதை வம்சம் நீயோ… திஷா பதானியின் கலர்ஃபுல் க்ளிக்ஸ்!

ரிலீஸுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பே 130 கோடி ரூபாய் சம்பாதித்த நோலனின் ‘ஒடிசி’!

பிரபாஸின் ‘ஸ்பிரிட்’ படத்துக்கு இசையமைக்கிறாரா அனிருத்?

அடுத்த கட்டுரையில்
Show comments