Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி: ரூ.50 லட்சத்தை பெற்றவர் இவர்தான்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி: ரூ.50 லட்சத்தை பெற்றவர் இவர்தான்
, திங்கள், 25 செப்டம்பர் 2017 (22:20 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் ஒருவாரம் மட்டுமே உள்ளது. வரும் சனி அல்லது ஞாயிறு அன்று இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார்? யாருக்கு ரூ.50 லட்சம் கிடைக்க போகிறது என்பது தெரிந்துவிடும். கணேஷ், சினேகன், ஆரவ், பிந்துமாதவி மற்றும் ஹரிஷ் ஆகிய ஐந்து நபர்களில் யாருக்கு அந்த ரூ.50 லட்சம் என்பது தெரிய வேண்டுமா? அப்படியானால் நீங்கள் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும்

 
ஆனால் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி நேற்றோடு முடிந்து நடிகர் சிவபாலாஜி வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரூ.50 லட்சம் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. அவரை அடுத்து ஆதர்ஷ் கிருஷ்ணா இரண்டாவது இடத்தை தட்டி சென்றுள்ளார். இந்த நிகழ்ச்சியை பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற சிவபாலாஜி தமிழ்ப்படங்கள் சிலவற்றில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவருடைய மனைவி மதுமிதாவும் தமிழ் நடிகை என்பதும் இருவரும் இணைந்து சத்யராஜ் நடித்த 'இங்கிலீஷ்காரன்' என்ற படத்தில் நடித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
webdunia


 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷூட்டிங்கில் ‘பிட்டு’ படத்தின் இரண்டாம் பாகம்?