Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சுச்சி லீக்ஸ் விவகாரம் ; மன்னிப்பு கேட்ட சுசித்ரா

சுச்சி லீக்ஸ் விவகாரம் ; மன்னிப்பு கேட்ட சுசித்ரா
, வெள்ளி, 28 ஏப்ரல் 2017 (16:31 IST)
கடந்த மார்ச் மாதம், பாடகி மற்றும் ரேடியோ தொகுப்பாளினி சுசித்ராவின் டிவிட்டர் பக்கத்தில், நடிகர் நடிகைகளின் அந்தரங்க படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.


 

 
சுசித்ராவின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு ஹேக்கர்களின் கைவரிசை இது என்று கூறப்பட்டது. மேலும், சுசித்ரா மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என கார்த்திக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.  அதேபோல், தனது கணவரை பிரிய உள்ளதாக சுசித்ரா பேட்டியும் கொடுத்தார். 
 
சுசித்ராவின் கணவர் உள்பட யாருக்கும் சுசித்ரா எங்கே இருக்கின்றார் என்று தெரியவில்லை எனக் கூறப்பட்டது. மேலும், சுசித்ரா கடத்தப்பட்டதாக கூட கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது.  அதன் பின் சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் ஏராளமான வீடியோக்கள் டிவிட்டரில் வலம் வந்தன. தற்போது அந்த விவகாரம் அடங்கியுள்ளது.

webdunia

 

 
இந்நிலையில், அந்த சம்பவத்திற்கு பிறகு கணவருடன் அமெரிக்க சென்று விட்ட சுசித்ரா, தற்போது ஒரு ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:
 
எனது டிவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு, அதில் நடிகர்களின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியானதால் ஏற்பட்ட மன உளைச்சலில் நான் மனநலம் பாதிக்கப்பட்டேன். அதிலிருந்து மீள எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் உதவியால், தற்போது நான் மீண்டு விட்டேன். 
 
செய்தது நானில்லை என்றாலும், என்னுடைய டிவிட்டர் கணக்கிலிருந்து சில புகைப்படங்கள் வெளியானதால், நான் அது சம்பந்தப்பட்ட நடிகர், நடிகைகளிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். எனது திரையுலக நண்பர்கள் என்னை தவறாக நினைக்க மாட்டார்கள் என நம்புகிறேன். எனக்கு ஏற்பட்ட நிலைமை எதிரிக்கும் வரக்கூடாது” என சுசித்ரா கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கணவன் சப்-இன்ஸ்பெக்டர் தானாம்… ஆனா, மனைவி இன்ஸ்பெக்டராம்…