Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடகி கல்பனாவுக்கு என்ன ஆச்சு? தற்கொலைக்கு முயற்சி செய்ததால் பரபரப்பு..!

Siva
புதன், 5 மார்ச் 2025 (07:45 IST)
தமிழ் உள்பட சில மொழிகளில் பாடிய பிரபல பாடகி கல்பனா, தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் நிலையில், தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாடகி கல்பனா, ஹைதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த சில ஆண்டுகளாக வசித்து வருகிறார். இவரின் வீட்டின் கதவு இரண்டு நாட்களாக திறக்கப்படாமல் இருந்ததை கவனித்த காவலாளி, உடனடியாக காவல்துறைக்கு தகவல் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் விரைந்து வந்து கல்பனாவின் வீட்டு கதவை உடைத்து பார்த்தபோது, அவர் மயக்க நிலையில் படுக்கையில் இருந்துள்ளார். காவல்துறையினர் அவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், தற்போது வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கல்பனா தற்கொலைக்கு முயன்றாரா? இதற்குக் காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கல்பனா மயக்கத்திலிருந்து மீண்டு வந்தால் தான் உண்மையாக என்ன நடந்தது என்பது தெரிய வரும்.

பிரபல பாடகர் மற்றும் நடிகர்-பாடகர் டிஎஸ் ராகவேந்திராவின் மகள் தான் கல்பனா. இவர் ஏராளமான தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நூற்றுக்கணக்கான பாடல்கள் பாடியுள்ளார். மேலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றுள்ளார்.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அவர் இசைஞானி அல்ல, மெய்ஞானி.. இளையராஜாவுக்கு திருமாவளவன் புகழாரம்..!

’மூக்குத்தி அம்மன் 2’ பூஜை, படப்பிடிப்பு எப்போது? பரபரப்பு தகவல்..!

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் ‘வாவ்’ கிளிக்ஸ்!

தங்க நிற சேலையில் ஜொலிக்கும் சமந்தா… க்யூட் போட்டோஸ்!

சூரியை வைத்து வெப் சீரிஸ் இயக்கும் விக்ரம் சுகுமாரன்!

அடுத்த கட்டுரையில்
Show comments