Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வங்கியில் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிய தமிழ் நடிகை?

வங்கியில் மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பிய தமிழ் நடிகை?
, ஞாயிறு, 11 மார்ச் 2018 (09:36 IST)
வங்கியில் கடன் வாங்கி அதை கட்டாமல் வெளிநாட்டுக்கு தப்பி செல்வது தற்போதைய ஃபேஷனாகி வரும் நிலையில் விஜய் மல்லையா, நீரவ் மோடியை தொடர்ந்து தமிழ் நடிகை ஒருவர் ரூ.36 லட்சம் வங்கியில் மோசடி செய்துவிட்டு லண்டனுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது

'ஈரம்', சமுத்திரம், கடல்பூக்கள் போன்ற தமிழ் படங்களில் நடித்த நடிகை சிந்துமேனன், பேங்க் ஆப் பரோடா வங்கியில் தனது சகோதரர் வாங்கிய ரூ.36 லட்சம் கடனுக்கு தன்னுடைய சொத்துக்களின் ஆவணங்களை கொடுத்திருந்தாராம். ஆனால் அந்த ஆவணங்கள் போலியானவை என்று தற்போது தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் சிந்துமேனன் சகோதரை கைது செய்து விசாரணை செய்து வரும் போலிசார், லண்டனை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து அங்கேயே செட்டிலாகிவிட்ட சிந்துமேனனையும் இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணை செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஷூட்டிங்கை கேன்சல் செய்த தீபிகா...