நடிகர் சிம்புவுக்கு நான்கு படங்களில் சம்பளமாக 200 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாகவும், அந்த பணத்தை அப்படியே எஸ்டிஆர் 50 படத்தில் அவர் முதலீடு செய்து தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கமலஹாசனுடன் சிம்பு நடித்த தக்லைப் திரைப்படத்திற்காக, அவருக்கு 40 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, பார்க்கிங் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகும் படம், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாக இருக்கும் படம் மற்றும் இன்னொரு பிரபல தெலுங்கு தயாரிப்பாளரின் தயாரிப்பில் உருவாக இருக்கும் திரைப்படம் ஆகிய மூன்றுக்கும் சேர்த்து, 160 கோடி ரூபாய் சம்பளம் அவருக்கு கிடைத்ததாகவும், மொத்தத்தில் நான்கு படங்களில் 200 கோடி ரூபாய் சம்பளம் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த பணத்தை அப்படியே தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் எஸ்டிஆர் 50 திரைப்படத்தில் முதலீடு செய்வதாகவும், இந்த படத்தை அவரே முழுமையாக தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.