Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

”இப்ப எல்லாரும் பேன் இந்தியா படம்குறாங்க”… விக்ரம் மேடையில் கமலின் ‘மருதநாயகம்’ பற்றி பேசிய சிம்பு!

Advertiesment
கமல்
, திங்கள், 16 மே 2022 (11:49 IST)
நேற்று சென்னையில் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழா நடந்தது.

இந்த விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிலம்பரசன் கமலை தனது திரைவாழ்க்கையின் குரு எனப் பேசினார். மேலும் அவர் பேசும்போது “இப்ப எல்லோரும் பேன் இந்தியா திரைப்படம்னு சொல்றாங்க… அவங்களுக்கு எல்லாம் நான் ஒன்னு சொல்றேன். கமல் சார் மருதநாயகம் படத்துல இருந்து ஒரு அஞ்சு நிமிஷ காட்சிகள வெளியிடுங்க… அது போதும்” எனப் பேச கமல் ரசிகர்கள் கத்தி ஆரவாரம் செய்தனர்.

மருதநாயகம் கமலின் கனவுப் படங்களில் ஒன்று. இந்த படத்துக்காக இங்கிலாந்து மகாராணியை எல்லாம் வரவைத்து படபூஜை நிகழ்த்தினார் கமல். மிகப்பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவில் இந்த திரைப்படத்தை உருவாக்க கமல் திட்டமிட்டார். படப்பிடிப்பு தொடங்கி 30 நிமிடங்கள் வரை ஓடும் காட்சிகளையும் எடுத்து முடித்து ஒரு பாடலையும் ரிலீஸ் செய்தார். ஆனால் அதன் பின் பொருளாதார காரணங்களால் இந்த படம் நிறுத்தப்பட்டது. மிரட்டலான அந்த பாடல் இணையத்தில் பரவலான கவனத்தைப் பெற்றது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்த சமந்தா… ரிலீஸ் தேதியுடன் வெளியான போஸ்டர்!