Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இதனால்தான் பத்து தல ஷூட்டிங் நிறுத்தப்பட்டது… வெளியான தகவல்!

இதனால்தான் பத்து தல ஷூட்டிங் நிறுத்தப்பட்டது… வெளியான தகவல்!
, சனி, 13 ஆகஸ்ட் 2022 (15:36 IST)
பத்து தல படக்குழுவினர் சிம்புவின் வருகைக்காக சில மாதங்களாக காத்திருந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் ஷூட்டிங் தொடங்கியது.

கன்னடத்தில் ஹிட்டடித்த மப்டி படத்தை தமிழில் முதலில் அதே பெயரில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா. இந்த படத்தின் நாயகனாக கௌதம் கார்த்திக்கும், முக்கியமான ஒரு வேடத்தில் சிம்பு நடிக்கவும் ஒப்பந்தமாகி சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் அதன் பிறகு சிம்பு படப்பிடிப்பில் கலந்து கொள்ளாததால் நிறுத்தப்பட்டது.

இப்போது சில பல மாற்றங்களோடு அந்த படம் மீண்டும் தொடங்கப்பட்டு சிம்பு இல்லாத மற்ற காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு விட்டன. சிம்புவுக்காக படக்குழு காத்திருக்கிறது. இந்நிலையில் இப்போது வெந்து தணிந்தது காடு படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் சிம்பு சம்மந்தப்பட்ட காட்சிகள் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் படமாக்கப்பட்டு வந்தன. அதையடுத்து திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும், அதற்குக் காரணம் சிம்புதான் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இப்போது படப்பிடிப்பு நடந்த பகுதிகளில் அதிக மழை பெய்யும் காரணத்தாலும், படத்தில் நடிக்கும் நடிகர் கௌதம் மேனன் வேறு வேலைகளில் பிஸியாக இருப்பதாலும் நிறுத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் ஆண்டனியின் ஒரு படத்தைக் கூட பார்த்ததில்லை - மிஷ்கின்