Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு தேசிங் படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவல்… புகைப்படத்தை வெளியிட்டு பதில் சொன்ன சிம்பு!

vinoth
வெள்ளி, 3 ஜனவரி 2025 (07:54 IST)
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் தேசிங் பெரியசாமி. அதன் பிறகு அவர் ரஜினிக்காக பிரம்மாண்ட கதை ஒன்றை எழுதினார். ஆனால் திடீரென்று அதிலிருந்து ரஜினி விலகினார். அதன் பின்னர் சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அந்த படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் பின்னர் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அந்த படத்தில் இருந்து விலகியது. அதன் பின்னர் சிம்புவும் தேசிங்கும் புதிய தயாரிப்பாளரைத் தேடி வந்தனர். இந்த படத்தைத் தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வராததற்கானக் காரணம் அதன் பட்ஜெட்தான் என சொல்லப்படுகிறது. சிம்புவை வைத்து இவ்வளவு பணத்தை முதலீடு செய்தால் அதைத் திரும்பப் பெறுவது கஷ்டம் என பலரும் பின்வாங்குவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது அந்த கதையை தேசிங் பெரியசாமி , அஜித்துக்கு சொல்ல முடிவெடுத்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருப்பதாக சினிமா பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த தகவல் வேகமாக சிம்பு ரசிகர்கள் மத்தியில் பரவ இதற்குப் பதிலளிக்கும் விதமாக சிம்பு இயக்குனர் தேசிங் பெரியசாமியோடு கைகோர்த்து நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு அந்த தகவல் பொய் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பிரபல ராப் பாடகர் வேடன் மீது பாலியல் குற்றச்சாட்டு… பெண் மருத்துவர் புகார்!

மீண்டும் ஒரு பீரியட் கதையில் நடிக்கும் ரிஷப் ஷெட்டி… வெளியான அறிவிப்பு!

புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்… தயாரிப்பு நிறுவனம் யார் தெரியுமா?

சூர்யாவுக்கு மட்டும் flop கொடுத்தேனா?... இயக்குனர் பாண்டிராஜ் விளக்கம்!

பிற மொழிப் படங்களை இயக்கும் போது மாற்றுத்திறனாளி போல உணர்கிறேன்… AR முருகதாஸ் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments