Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிம்பு தேசிங் படம் கைவிடப்பட்டதாக வெளியான தகவல்… புகைப்படத்தை வெளியிட்டு பதில் சொன்ன சிம்பு!

vinoth
வெள்ளி, 3 ஜனவரி 2025 (07:54 IST)
கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர் இயக்குனர் தேசிங் பெரியசாமி. அதன் பிறகு அவர் ரஜினிக்காக பிரம்மாண்ட கதை ஒன்றை எழுதினார். ஆனால் திடீரென்று அதிலிருந்து ரஜினி விலகினார். அதன் பின்னர் சிம்பு நடிப்பில் தேசிங் பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அந்த படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் பின்னர் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அந்த படத்தில் இருந்து விலகியது. அதன் பின்னர் சிம்புவும் தேசிங்கும் புதிய தயாரிப்பாளரைத் தேடி வந்தனர். இந்த படத்தைத் தயாரிக்க தயாரிப்பாளர்கள் முன்வராததற்கானக் காரணம் அதன் பட்ஜெட்தான் என சொல்லப்படுகிறது. சிம்புவை வைத்து இவ்வளவு பணத்தை முதலீடு செய்தால் அதைத் திரும்பப் பெறுவது கஷ்டம் என பலரும் பின்வாங்குவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது அந்த கதையை தேசிங் பெரியசாமி , அஜித்துக்கு சொல்ல முடிவெடுத்து அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருப்பதாக சினிமா பத்திரிக்கையாளர் வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்த தகவல் வேகமாக சிம்பு ரசிகர்கள் மத்தியில் பரவ இதற்குப் பதிலளிக்கும் விதமாக சிம்பு இயக்குனர் தேசிங் பெரியசாமியோடு கைகோர்த்து நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு அந்த தகவல் பொய் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திரையில் மகள் பெயரைப் பார்த்து நெகிழ்ந்த குஷ்பு… மணிரத்னத்துக்கு நன்றி!

அமேசான் ப்ரைமில் விடுதலை 2 படத்தின் இயக்குனர் கட் வெளியானது..!

வாடிவாசல் படத்தை கிடப்பில் போட சூர்யாதான் காரணமா?

கமல்ஹாசனை இயக்க ஆசை… ஆனால் நடக்குமா?- இயக்குனர் அமீர் பேச்சு!

என்னை சாதிய ரீதியாக ஒடுக்குகிரார் பழ கருப்பையா- இயக்குனர் கரு பழனியப்பன் குற்றச்சாட்டு!

அடுத்த கட்டுரையில்
Show comments