என்னிடம் கருப்புப் பணம் இல்லை… அதனால் பயமும் இல்லை-நடிகர் சித்தார்த்!

Webdunia
செவ்வாய், 12 அக்டோபர் 2021 (16:40 IST)
நடிகர் சித்தார்த் சமூகவலைதளங்களில் தைரியமாக கருத்துகளைப் பேசுவது குறித்து பேசியுள்ளார்.

நடிகர் சித்தார்த் ஷங்கரின் பாய்ஸ் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் மணிரத்னத்தின் ஆயுத எழுத்து உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும், தெலுங்கு படங்களிலும் நடித்து இன்று முன்னணி நடிகராக உள்ளார். சமூகவலைதளங்களில் அவர் தைரியமாக மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார்.

இதுபற்றி இப்போது ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் ‘நான் எப்போதுமே அதிகாரத்துக்கு எதிராகப் பேசி வருகிறேன். விஸ்வரூபம் பிரச்சனையின் போது கமலுக்கு ஆதரவாக அரசை விமர்சித்து பேசினேன். என் 8  வயதில் இருந்தே பேசி வருகிறேன். என்னிடம் கருப்புப் பணம் இல்லை. என்னிடம் பயமும் இல்லை’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கும் நாகேஷுக்கும் மட்டும்தான் அது தெரியும்.. இப்படிலாம் நடந்திருக்கா?

மகேந்திரன் பற்றி சொன்னதுல என்ன தப்பு? ராஜகுமாரனுக்காக வக்காளத்து வாங்கும் பயில்வான் ரங்கநாதன்

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments