Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினி ரசிகர்களைக் கடுப்பேத்திய சித்தார்த்தின் டிவீட்!

Webdunia
வியாழன், 28 ஜனவரி 2021 (11:26 IST)
நடிகர் சித்தார்த் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பகிர்ந்த ஒரு டிவீட் ரஜினி ரசிகர்களைக் கடுப்பாக்கியுள்ளது.

டெல்லியில் குடியரசு தின விழாவின் போது விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தியபோது காவல்துறையினர் மற்றும் துணை இராணுவப் படையினர் தடியடி நடத்தியதால் பரபரப்பான சூழல் உருவானது. மத்திய அரசின் இந்த போக்கு எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நடிகர் சித்தார்த் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ஒரு டிவிட்டை பகிர்ந்திருந்தார். அதில் ‘எப்போதும் போராட்டத்தை வன்முறையுடன் சமன் செய்கின்றனர். பாசிசம், ஒற்றை கொள்கை, வெறுப்பு அரசியல், ஏழைகள் மீதான வெறுப்பால் கீழ் நோக்கி செல்கிறோம். போராட்டம் ஜனநாயகத்தை கொல்லும் என்று சில கோமாளிகள் சொல்வார்கள். அவர்களை புறக்கணியுங்கள்’ எனக் கூறியிருந்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது  ’போராட்டம் செய்வது தவறு… இப்படியே போராட்டம் போராட்டம் என்றால் நாடு சுடுகாடாகிவிடும்’ என ரஜினி கூறியதைக் கேலி செய்யும் வகையில்தான் சித்தார்த் டிவீட் செய்துள்ளதாக பலரும் கூற, இப்போது ரஜினி ரசிகர்கள் சமூகவலைதளங்களில் சித்தார்த்தை கடுமையாக தாக்கி பேசி வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments