டாஸ்மாக், டிவி சேனல்களை மூடுவீர்களா? நடிகர் சித்தார்த் கேள்வி

Webdunia
வியாழன், 12 ஏப்ரல் 2018 (13:44 IST)
‘ஐபிஎல்லை இடமாற்றம் செய்தது போல், டாஸ்மாக் மற்றும் டிவி சேனல்களை மூடுவீர்களா?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் சித்தார்த்.
 
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நேரத்தில் சென்னையில் ஐபிஎல் போட்டிகள் நடந்தால் கவனம் திசை திரும்பிவிடும் என்பதற்காக, அதை எதிர்த்து பல அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
 
இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளை வேறு இடங்களுக்கு மாற்ற நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ‘இதேபோல் டாஸ்மாக், டிவி சேனல்களை மூடுவீர்களா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் சித்தார்த்.
 
“ஐபிஎல் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டது, வாழ்த்துகள். இதேபோல் டாஸ்மாக்கையும் மூடுவோமா? அரசியல்வாதிகள் நடத்தும் எல்லா டிவி சேனல்களையும் மூடலாமா? போராட்டக் களங்களில் கட்சிக் கொடிகளைத் தடை செய்யலாமா? ஏகப்பட்ட இக்கட்டான விஷயங்கள், மனிதர்கள் நம் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மொத்தமாகப் போராடுவோம” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சித்தார்த்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மனசு கஷ்டப்பட்டுத்தான் போயிருக்காரு.. ஏவிஎம் சரவணன் மறைவிற்கு காரணம்

நான் சிறை செல்ல எனது முன்னாள் மனைவி மஞ்சு வாரியர்தான் காரணம்: நடிகர் திலீப் பகிரங்க குற்றச்சாட்டு

கணவர் ப்ரஜினுக்காக பிக் பாஸ் வீட்டை விட்டு ஓடிய சான்ட்ரா: பரபரப்பு சம்பவம்!

23வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா: திரையிட தேர்வான 12 புதிய தமிழ் திரைப்படங்கள்!

அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை.. கம்பேக் கொடுத்த கேபிஒய் பாலா.. இதுல சிம்புவுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments