Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் ஒன்று சேரும் சித்தார்த் - பாபி சிம்ஹா

மீண்டும் ஒன்று சேரும் சித்தார்த் - பாபி சிம்ஹா
, செவ்வாய், 13 செப்டம்பர் 2016 (17:22 IST)
ஜிகர்தண்டா படத்தில் ஒன்று சேர்ந்து நடித்த சித்தார்த் - பாபி சிம்ஹா நீண்ட இடவேளைக்கு பின்னர் மீண்டும் மலையாள படம் ஒன்றில் ஒப்பந்தமாகி உள்ளனர்.


 
 
கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி ஹிட் அடித்த படம் ஜிகர்தண்டா. சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமிமேனன் நடித்த இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கினார். 
 
இப்போது ஒரு மலையாள படத்துக்காக மீண்டும் இணையவிருக்கிறார்கள் பாபி சிம்ஹாவும் சித்தார்த்தும். கம்மர சம்பவம் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த படத்தில் ஹீரோயினாக தமன்னா நடிக்கவிருப்பதாக ஒரு தகவல் பரவியது. 
 
ஆனால் தமன்னா தான் எந்த மலையாள படத்திலும் கமிட் ஆகவில்லை என்று அறிவித்துவிட்டார். 
 
பாபி சிம்ஹா ஏற்கெனவே நேரம், ஒரு வடக்கன் செல்ஃபி ஆகிய மலையாள படங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திடீரென பாய்ந்து முத்தமிட்ட நாயகனுக்கு பளார் விட்ட நாயகி