டி.எஸ்.திவாகரன் இயக்கத்தில் வளர்ந்துவரும் படம் மெய்மை. ரஜின்,வித்யாஸ்ரீ என்ற முது முகங்கள் கதையின் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.
இந்த படத்தில் ஒரு காட்சியில் கதா நாயகியை நாயகன் கட்டிப்பிடித்து முத்தமிடவேண்டும் என்றும், அந்த காட்சி தத்ரூபமாக அமையவேண்டும் என்பதால் நாயகிக்கு தெரியாமல் திடீரென கட்டிபிடித்து முத்தமிடவேண்டும் என்று இயக்குனர் நாயகனிடம் ரகசியமாக கூறினாராம்.
இதையடுத்து கதாநாயகன் ரஜின் திடீரென நாயகியை அணைத்து முத்தமிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த வித்யாஸ்ரீ யாரும் எதிர்ப்பாராதவிதமாக பளார்’ என்று நாயகனை கன்னத்தில் அறைந்துவிட்டார். ஓடி வந்த இயக்குனரும், கேமராமேனும் நிலைமையை விளக்கி சொன்னதும் நாயகனிடம் நாயகி மன்னிப்பு கேட்டார்.
இதனால் படப்பிடிப்பில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.