Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வேட்டையாடுபவர்களை வேட்டையாட புறப்பட்ட சிபி சத்யராஜ்! புதிய படம் அறிவிப்பு

வேட்டையாடுபவர்களை வேட்டையாட புறப்பட்ட சிபி சத்யராஜ்! புதிய படம் அறிவிப்பு
, வியாழன், 21 மார்ச் 2019 (11:44 IST)
வனஅதிகாரியாக சிபி சத்யராஜ் நடிக்கும் புதிய படம் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சத்யராஜ் மகன் சிபி சத்யராஜ் வித்தியாசமான கதை அம்சம் உள்ள படங்களை தேடிச் சென்று நடித்து வருகிறார். அந்த வகையில் அவரது சமீபத்திய படமான ஜாக்சன் துரை மக்களிடம் வரவேற்பை பெற்றது. ஒரு நடிகராகவும் மக்களிடம் பாராட்டை பெற்றார் சிபி சத்யராஜ்.
webdunia
இப்போது அவர் புதிய படம் குறித்து அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். ஜான்சன் துரை படத்தை இயக்கிய தரணிதரன் இயக்கத்தில் அவுரா சினிமாசின் புரொடக்சன் நம்பர் 2 படத்தில் நடிக்கிறார்.

காடுகளில் புலிகளை வேட்டையாடி உணவாக்குவது சமீபத்தில் அதிகரித்துவிட்டது. குறிப்பாக இந்தியாவில் புலிகள் வேட்டையாடப்படுவது அதிகமாகி உள்ளது. இதனை தடுக்கும் வனஅதிகாரி வேடத்தில் சிபி சத்யராஜ் நடிக்க  உள்ளார். இந்த தகவலை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடை தெரியும்படி ஆடை அணிந்து வந்த நடிகை: நெட்டிசன்கள் விளாசல்