Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் இணைந்த ‘ராஜா ராணி’ ஜோடி

மீண்டும் இணைந்த ‘ராஜா ராணி’ ஜோடி
, திங்கள், 5 ஜூன் 2017 (14:57 IST)
‘ராஜா ராணி’ படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் இசையில் பாடிய சாஷா திருப்பதி, மீண்டும் அவர் இசையில் பாடியுள்ளார்.


 

அட்லீ இயக்கத்தில் ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா ஆகியோர் நடித்த படம் ‘ராஜா ராணி’. இந்தப் படத்துக்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘ஓடே ஓடே’ பாடலைப் பாடியவர் சாஷா திருப்பதி. இதுதான் அவருக்கு முதல் பாடல். இந்தப் பாடல், யூ டியூபில் 6 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது.

‘இதுதான் என்னுடைய மிகப்பெரிய முதல் வெற்றி’ என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள சாஷா, அதற்கு காரணமான ஜி.வி.பிரகாஷுக்கும் நன்றி தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான், யுவன் சங்கர் ராஜா, டி.இமான் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பாடியுள்ள சாஷா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜி.வி.யின் இசையில் பாடியுள்ளார். ‘நெஞ்சே’ என்று தொடங்கும் இந்தப் பாடல், ஜி.வி. நடித்துள்ள ‘செம’ படத்தில் இடம்பெற்றுள்ளது. யுகபாரதி எழுதியுள்ள இந்தப் பாடல், இந்த வாரம் ரிலீஸாகிறது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரபல தயாரிப்பாளரால் பாலியல் தொல்லை; இளம்நடிகை புகார்