Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அடுத்தது வேள்பாரிதான்.. இயக்குனர் ஷங்கர் கொடுத்த அப்டேட்!

Advertiesment
அடுத்தது வேள்பாரிதான்.. இயக்குனர் ஷங்கர் கொடுத்த அப்டேட்!

vinoth

, ஞாயிறு, 5 ஜனவரி 2025 (08:44 IST)
இயக்குனர் ஷங்கர் எழுத்தாளரும், மக்களவை உறுப்பினருமான சு வெங்கடேசன் எழுதிய வேள்பாரி நாவலைப் படமாக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. பாகுபலி மற்றும் பொன்னியின் செல்வன் போன்ற வரலாற்று படங்களின் வெற்றியை அடுத்து மறுபடியும் ஒரு வரலாற்று புனைவு திரைப்படம் உருவாக உள்ளது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த கதையை அவர் 1000 கோடி ரூபாயில் மூன்று பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாக்க உள்ளதாகவும், அதில் பாலிவுட் ஹீரோ ரண்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

தற்போது கேம்சேஞ்சர் பட ப்ரமோஷன்களில் ஈடுபட்டு வரும் ஷங்கர் அடுத்து வேள்பாரி படத்தைதான் இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இதற்கிடையில் அவர் எஞ்சியிருக்கும் இந்தியன் 3 படத்தின் வேலைகளைத் தொடங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

5 பாட்டிருக்கி… 75 கோடி செலவு செஞ்சிருக்கி… கேம்சேஞ்சர் தயாரிப்பாளர் கொடுத்த அப்டேட்!