Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புனேயில் பிரம்மாண்டமான அரங்கு தயார்… ஷங்கர் படத்துக்காக!

புனேயில் பிரம்மாண்டமான அரங்கு தயார்… ஷங்கர் படத்துக்காக!
, புதன், 6 அக்டோபர் 2021 (12:02 IST)
இயக்குனர் ஷங்கர் இயக்கும் புதிய படத்தில் விரைவில் நடிக்க உள்ளார் ராம்சரண் தேஜா.

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் கமல்ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2 படத்தை இயக்கி வந்த நிலையில் திடீரென அந்த படத்தை கைவிட்டுவிட்டு தற்போது ராம்சரண் தேஜா நடித்த உள்ள தெலுங்கு படம் ஒன்றை இயக்கவுள்ளார். இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்க உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகி யார் என்பது அறிவிக்கப்படாத நிலையில் இப்போது கியாரா அத்வானி மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் பெயர் அடிபட்டு வந்தது. இந்நிலையில் இப்போது கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லைகா உடனான பிரச்சனைகளை முடித்துவிட்டு ஷங்கர் ராம்சரண் தேஜாவின் படத்தை இயக்குவார் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஷங்கர் படத்தின் படப்பிடிப்புக்காக புனேவில் பிரம்மாண்டமாக 10 கோடி ரூபாய் செலவில் ஒரு அரங்கு அமைக்கப்பட்டு வருகிறது. இதில் சில சண்டைக் காட்சிகள் மற்றும் கியாரா அத்வானி மற்றும் ராம்சரண் மோதும் காட்சிகளை படமாக்க உள்ளாராம் ஷங்கர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சண்டை ஆரம்பிச்சுடுச்சு வீட்டுல.... உருளும் அண்ணாச்சி தலை!