Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயக்குனர் ஷங்கரின் தயாரிப்பாளர்களின் நிலை இதுதான்!

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (08:18 IST)
தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட படங்களுக்கு சொந்தக்காரரான இயக்குனர் ஷங்கர் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் பெரும்பாலானவர்கள் இப்போது படங்களைத் தயாரிப்பதே இல்லையாம்.

ஜெண்டில் மேன் படம் மூலமாக அறிமுகமான இயக்குனர் ஷங்கர் தனது படங்களின் பிரம்மாண்டங்களுக்காக தனித்து தெரிந்தார். ஆனால் அவர் படங்களின் பிரம்மாண்டம் என்பது கதையில் இல்லாமல் பாடல்களை உருவாக்குவதிலும் தேவையில்லாத செட்களைப் போடுவதிலும்தான் அதிகம் கவனம் செலுத்தியது என விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் என்னதான் ஷங்கர் பிரம்மாண்டமான படங்களை எடுத்தாலும், அவரின் தயாரிப்பாளர்கள் பெரிய அளவில் லாபம் சம்பாதித்தது இல்லை என சொல்லப்படுகிறது. இதுவரை அவர் 9 நிறுவனங்களுக்காக படம் இயக்கியுள்ளார். ஆனால் அதில் இப்போது 7 நிறுவனங்கள் தயாரிப்பிலேயே ஈடுபடுவதில்லையாம். இதில் ஏவிஎம், ஆஸ்கர் பிலிம்ஸ், மற்றும் கே டி குஞ்சுமோனின் நிறுவனம் ஆகிய முன்னணி நிறுவனங்களும் அடக்கம்.

தொடர்புடைய செய்திகள்

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments