Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஷங்கர்-ராஜமெளலி என இரண்டு பிரமாண்டங்களை இணைத்த ஏ.ஆர்.முருகதாஸ்

ஷங்கர்-ராஜமெளலி என இரண்டு பிரமாண்டங்களை இணைத்த ஏ.ஆர்.முருகதாஸ்
, புதன், 6 செப்டம்பர் 2017 (23:34 IST)
இந்தியாவின் பிரமாண்டமான இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் ஷங்கர் மற்றும் எஸ்.எஸ்.ராஜமெளலி. ராஜமெளலியின் 'பாகுபலி 2' படத்தின் வசூலை முறியடிக்கும் வல்லமை ஷங்கரின் '2.0' படத்திற்கு மட்டுமே உள்ளது என்று கூறப்படுகிறது.



 
 
இந்த நிலையில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள 'ஸ்பைடர்' படத்தின் இசை வெளியீடு வரும் 9ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. தமிழ், தெலுங்கு பாடல்கள் ஒரே மேடையில் வெளியாகவுள்ள நிலையில் தமிழ் பாடல்களை ஷங்கரும், தெலுங்கு பாடல்களை எஸ்.எஸ்.ராஜமெளலியும் வெளியிடுகின்றனர்.
 
இரண்டு பிரமாண்டமான இயக்குனர்களை இணைத்த இன்னொரு பிரமாண்டமான இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ஸ்பைடர் திரைப்படம் வரும் 27ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எஸ்பி பாலசுப்பிரமணியனுக்கு என்ன ஆச்சு? வேகமாக பரவு வதந்தி