Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வடிவேலு பிரச்சனை தீர்ந்தது… ஆனால் ஷங்கரின் 3 கோடி?

Webdunia
செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (16:44 IST)
வடிவேலு மீதான ரெட் தடை சில நாள்களுக்கு முன்னர் நீக்கப்பட்டது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடிவேலு சிம்புதேவன் காம்போவின் ஹிட் காம்போவான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க திட்டமிட்டனர். படத்தின் போஸ்டர் வெளியாகி சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது. ஆனால் வடிவேலுவுக்கும், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ஒரு கட்டத்தில் படமும் கைவிடப்பட்டது. இதனால் லைகா நிறுவனத்துக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு வடிவேலு ஈடு செய்யவேண்டும் என்று அவருக்கு ரெட் விதிக்கப்பட்டது.  இப்போது அந்த பிரச்சனை சுமூகமாக முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இது சம்மந்தமாக வடிவேலு மற்றும் லைகா அதிபர் சுபாஷ்கரன் சந்திப்புக்கு பின் இந்த முடிவு எடுக்கப்பட்டது. லைகாவின் இழப்புக்கு வடிவேலு படங்கள் நடித்துத் தர ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் இம்சை அரசன் 24 ஆம் புலிகேசிக்காக ஷங்கர் செலவு செய்த 3 கோடி ரூபாய்க்கு வடிவேலு எந்த பதிலும் சொல்லவில்லையாம். இதனால் ஷங்கர் அடுத்ததாக நடவடிக்கை எதாவது மேற்கொள்வாரா என தெரியவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் VJS நடிக்கும் படத்தில் இணையும் முன்னணி பாலிவுட் நடிகை!

நான் ராஜமௌலி படத்தில் நடிக்க மாட்டேன் என்று சொல்லி சர்ச்சையில் சிக்கிய சிரஞ்சீவி!

புஷ்பா கதாபாத்திரத்தை இப்படிதான் நான் உருவாக்கினேன் -இயக்குனர் சுகுமார் பகிர்ந்த தகவல்!

அல்லு அர்ஜுன் & அட்லி கூட்டணியில் உருவாகும் படத்துக்கு இவர்தான் இசையமைப்பாளரா?

Pure 90S Vibe GBU மாமே!: அஜித் படத்துல அண்ணன எறக்குறோம்.. ‘அக்கா மக’ டார்கிய உள்ளே கொண்டு வந்த ஆதிக்!

அடுத்த கட்டுரையில்
Show comments