Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

24 வருடங்களுக்குப் பிறகு சந்தித்த அலைபாயுதே ஜோடி… இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம்!

24 வருடங்களுக்குப் பிறகு சந்தித்த அலைபாயுதே ஜோடி… இணையத்தில் வைரல் ஆகும் புகைப்படம்!

vinoth

, திங்கள், 28 அக்டோபர் 2024 (11:28 IST)
அஜித் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் அமர்க்களம் படத்தில் நடித்த போது காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டனர். அதன் பிறகு ஷாலினி சினிமாவில் இருந்து விலகி பேட்மிண்ட்டன் விளையாட்டில் கவனம் செலுத்தினார். இந்த தம்பதிகளுக்கு அனோஸ்கா மற்றும் ஆத்விக் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

திருமணம் ஆகி 23 ஆண்டுகள் வெற்றிகரமாக கடந்துள்ளனர். அஜித் கடந்த சில ஆண்டுகளாகவே பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை. அதுபோல எந்த சோஷியல் மீடியாவிலும் அவர் இல்லை. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு ஷாலினி அஜித் இன்ஸ்டாகிராமில் இணைந்தார். அதன் பின்னர் அவர் தன் குடும்பத்தினரோடு இருக்கும் புகைப்படங்களை எல்லாம் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் நடிகர் மாதவனை சந்தித்து எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர அது வைரலாகி வருகிறது. இருவரும் இணைந்து நடித்த அலைபாயுதே படம் சூப்பர் ஹிட் ஆகி, அவர்களை பிரபலமாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

புஷ்பா 2 பட ப்ரமோஷனுக்கு மட்டும் 100 கோடி ரூபாயா?... ஷாக் கொடுக்கும் படக்குழு!