கார் விபத்தில் சின்னத்திரை சீரியல் நடிகை மரணம்.. ரசிகர்கள் அதிர்ச்சி..!

Mahendran
திங்கள், 13 மே 2024 (13:10 IST)
ஆந்திராவில் நடந்த கார் விபத்தில் சின்னத்திரை சீரியல் நடிகை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
தெலுங்கு மற்றும் கன்னட சீரியல்களில் நடித்தவர் பவித்ரா ஜெயராம். இவர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் மாரி என்ற தொடரின் தெலுங்கு டப்பிங் தொடரில் நடித்து வருகிறார். 
 
இந்த நிலையில் பவித்ரா ஜெயராம் நேற்று தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டிருந்த நிலையில் எதிரே வந்த பேருந்தின் மீது கார் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் பவித்ரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் அவரது குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் சின்னத்திரை நடிகை பவித்ரா ஜெயராம் கார் விபத்தில் காலமானதை அறிந்து அதிர்ச்சி அடைந்த சின்னத்திரை உலகினர் அவருக்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

‘வாரணாசி’க்கு டஃப் கொடுத்த நம்மூர் ஹீரோக்கள்! முரட்டுக்காளை ரஜினியை மறந்துட்டீங்களா?

அடுத்த விஜய்சேதுபதி இவர்தான்.. அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் இவரா? இதோ சூப்பரான அப்டேட்

அஜித் படத்தில் எனக்கு இருந்த ஒரே வருத்தம்.. ரொம்ப நாளைக்கு பிறகு ஃபீல் பண்ணும் நடிகை

நடிகர் பிரேம்ஜி அமரனுக்கு பெண் குழந்தை.. குவியும் திரையுலகினர்களின் வாழ்த்து..!

அந்தக் கருமத்தை ஏன் பாக்குறீங்க? பிக்பாஸ் குறித்த கேள்விக்கு கடுப்பான மன்சூர்அலிகான்

அடுத்த கட்டுரையில்
Show comments