Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தையும் தற்கொலை…!

vinoth
செவ்வாய், 31 டிசம்பர் 2024 (10:36 IST)
தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு நட்சத்திர விடுதி ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சித்ராவின் சாவில் மர்மம் உள்ளதாக சித்ராவின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது சம்மந்தமாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையானார். சித்ரா தற்கொலைதான் செய்துகொண்டார் என உடற்கூறு ஆய்வில் வெளியானது. இந்த வழக்கில் பலருக்கு தொடர்பிருப்பதாக பல செய்திகள் வெளியாகின. ஆனால் இன்றளவும் ஒரு மர்ம மரணமாகவே சித்ராவின் தற்கொலை உள்ளது.

இந்நிலையில் தற்போது சித்ராவின் தந்தை காமராஜ் திருவான்மியூரில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காமராஜ் காவல்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சித்ராவின் துப்பட்டாவில் தூக்கிட்டு அவர் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவரது உடலைக் கைப்பற்றி தற்போது போலீஸார் முதல் கட்ட விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அர்ஜுன் இயக்கத்தில் உருவாகும் சீதா பயணம் டீசர் வெளியீடு… எப்படி இருக்கு?

எதிர்மறை விமர்சனங்களின் எதிரொலி… பாதியாகக் குறைந்த தக் லைஃப் படத்தின் காட்சிகள்…!

மகாராஜா வசூலில் பத்தில் ஒரு மடங்குதான்… VJS ன் ‘ஏஸ்’ பட வசூல் விவரம்!

ஒன்பது கிரகங்களில் உச்சம் பெற்ற ஒருவன்… அஜித்தின் அடுத்த படத்துக்கும் சாய் அப்யங்கர்தான் இசையா?

மனுசி படத்தை மீண்டும் பார்த்து மறு ஆய்வு செய்ய சென்சார் போர்டு சம்மதம்.. !

அடுத்த கட்டுரையில்
Show comments