Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செந்தில், ரமேஷ்கண்ணா, சந்தானபாரதி: இவர்கள் மகன்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா?

செந்தில், ரமேஷ்கண்ணா, சந்தானபாரதி: இவர்கள் மகன்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா?
, வியாழன், 5 அக்டோபர் 2017 (22:53 IST)
நகைச்சுவை நடிகர்கள் ரமேஷ்கண்ணா, செந்தில் மற்றும் இயக்குனர்-நடிகர் சந்தானபாரதி ஆகியோர் தங்கள் வாரிசுகளை சினிமாத்துறைக்கே கொண்டு வந்துள்ளனர். அதிலும் நடிகராக ஆக்காமல் அனைவரும் தங்கள் மகன்களை இயக்குனர்களாக்க முயற்சித்து வருகின்றனர்.



 
 
ஆம், செந்தில் மகன் ஹேமச்சந்திரபாபு அஜித் நடித்த வீரம், வேதாளம், விவேகம் ஆகிய மூன்று படங்களிலும் உதவி இயக்குனராக பணிபுரிந்துவிட்டு தற்போது சொந்தமாக படம் இயக்க முயற்சித்து வருகிறார்.
 
அதேபோல் ரமேஷ்கண்ணாவின் இரண்டு மகன்களுமே தற்போது உதவி இயக்குனர்களாக உள்ளனர். மூத்த மகன் ஜஸ்வந்த், ஏ.ஆர்.முருகதாசிடமும், இளையமகன் பிரஜிஷ் இயக்குனர் மணிரத்னத்திடமும் உதவி இயக்குனர்களாக உள்ளனர். விரைவில் இருவரும் இணைந்து ஒரு படத்தை இயக்கவுள்ளார்களாம்
 
அதேபோல் சந்தானபாரதியின் மகன் சஞ்சய் பாரதி, இயக்குனர் விஜய்யிடமும் எழுத்தாளர் பாலகுமாரனின் மகன் சூர்யா, இயக்குனர் அட்லியிடமும் உதவி இயக்குனர்களாக பணிபுரிந்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'விவேகம்' நடிகருக்கு அழைப்பு விடுத்த 'மெர்சல்' படக்குழு