Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இசையும் குரலும் இணைக்கும் வரிகளாக காலம் இருக்கட்டும்.. ஜிவி பிரகாஷ்-சைந்தவி குறித்து சீனுராமசாமி

இசையும் குரலும் இணைக்கும் வரிகளாக காலம் இருக்கட்டும்.. ஜிவி பிரகாஷ்-சைந்தவி குறித்து சீனுராமசாமி

Siva

, செவ்வாய், 14 மே 2024 (08:42 IST)
ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் நேற்று திடீரென பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது திரை உலகினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜிவி பிரகாஷ் இசையமைப்பாளராக இருக்கும் வரை இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் நடிக்க தொடங்கியவுடன் தான் கருத்து வேறுபாடு அதிகரித்ததாகவும் குறிப்பாக நடிகைகளுடன் நெருக்கமாக நடிப்பதை சைந்தவி விரும்பவில்லை என்றும் இவர்களது பிரிவுக்கு இது தான் காரணமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவியை சேர்த்து வைக்க அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்பட்டு வருகிறது. ஆனால் இருவரும் பிரிவதில் உறுதியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் சைந்தவி பிரிவு குறித்து இயக்குனர் சீனு ராமசாமி தனது சமூக வலைத்தளத்தில் கூறி இருப்பதாவது:

பிரிவு விடுதலை  
இணைவு சிறை
வாழ்வில் எனில் பொறுமை
நல்ல முடிவுக்கு தெளிவு

வானம் இருக்கிறது
திசைகள் இருக்கிறது
திரும்பவும் இணையும்
ஒரு சந்தர்பத்திற்கு
நினைவை தந்து
பறக்கலாம் அவரவர் திசையில்

இசையும் குரலும்
இணைக்கும் வரிகளாக
காலம் இருக்கட்டும்

Edited by Siva
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுபாஷுக்கு பிஸ்கட்டை வைத்து மேக்கப் போட்டோம்… மஞ்சும்மள் பாய்ஸ் இயக்குனர் சொன்ன சுவாரஸ்ய தகவல்!