Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இசைஞானி இல்லை… அவர் இசை இறைவன் – இளையராஜாவுக்கு புதுப் பட்டம் சூட்டிய சீமான்!

vinoth
வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (07:00 IST)
உலகெங்கும் உள்ள தமிழர்கள் மத்தியில் அறிமுகம் தேவையில்லாத நபர்களில் ஒருவர் இசையமைப்பாளர் இளையராஜா. லட்சக்கணக்கான ரசிகர்கள் அவரையும், அவரது பாடல்களையும் தங்கள் மூச்சுக்காற்றாகவே நினைத்து வருகின்றனர். தன்னுடைய 82 ஆவது வயதிலும் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டும் உலகம் முழுவதும் சுற்றி வந்து இசைக் கச்சேரிகள் செய்வது என்றும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார்.

இந்நிலையில் தன்னுடைய 82 ஆவது வயதில் மார்ச் 8 ஆம் தேதி தன்னுடைய முதல் சிம்ஃபொனியை அரங்கேற்றினார். இதையடுத்து அவருக்கு இந்தியாவின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ வழங்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் தற்போது நிறைய நேர்காணல்களை அளித்து வருகிறார்.

இந்நிலையில் இளையராஜா இசையமைத்துள்ள ‘பேரன்பும் பெருங்கோபமும்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய சீமான் “அவரைப் பொறுத்தவரை இசைஞானி என்ற வார்த்தைக் கூட குறைவுதான். அவரை இசை இறைவன் என்றுதான் அழைக்கவேண்டும். அவரிடம் யார் எப்போது எந்த பாடல் கேட்டாலும் அருள்வார். இயக்குனர் படத்துக்கு ஒரு திரைக்கதை எழுதினால், இளையராஜா ஐயா தன் இசையால் ஒரு திரைக்கதை எழுதுவார். எப்படி இலக்கிய உலகில் பாரதி வந்தாரோ, அதுபோல இசை உலகில் இளையராஜா வந்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

15 வருடத்தில் மூன்றே வெற்றி படங்கள் தான்.. என்ன ஆச்சு கமலுக்கு?

கலாச்சார சீர்ழிவா? கலாச்சார புரட்சியா? ‘தக்லைஃப்’ த்ரிஷா கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் ஆதங்கம்..!

ரொம்ப கேவலமா இருக்குது.. ‘தக்லைஃப்’ படத்தை வச்சு செஞ்ச பிரபல விமர்சகர்..!

கிளாமர் லுக்கில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்!

ஹோம்லி லுக்கில் அழகு பதுமை ப்ரியங்கா மோகனின் க்யூட் க்ளிக்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments