Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

“மல்லிப்பூ வச்சி வச்சி வாடுது பாடலை எண்ணற்ற முறைக் கேட்கிறேன்…” கலைஞர்களை வாழ்த்தி சீமான் ட்வீட்

“மல்லிப்பூ வச்சி வச்சி வாடுது பாடலை எண்ணற்ற முறைக் கேட்கிறேன்…” கலைஞர்களை வாழ்த்தி சீமான் ட்வீட்
, சனி, 8 அக்டோபர் 2022 (08:46 IST)
சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் இடம்பெற்ற மல்லிப்பூ பாடல் மிகப்பெரிய அளவில் ரசிகர்களைக் கவர்ந்தது.

இதுபற்றி நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “என்னுடைய அன்புத்தம்பி சிலம்பரசன் அவர்கள் நடித்து, தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு இசைத்தமிழன் என் ஆருயிர் இளவல்  ஏ ஆர் ரஹமன் அவர்கள் இசையமைத்து வெளிவந்திருக்கிற 'வெந்து தணிந்தது காடு' படத்தில், என் பாசத்திற்கும் அன்பிற்கும் உரிய அக்கா தாமரை அவர்கள் எழுதி, பாடகி மதுஸ்ரீ அவர்கள் இனிமையான குரலில் பாடியிருக்கின்ற #மல்லிப்பூ பாடலை அண்மை நாட்களாக எண்ணற்ற முறை என் பயணங்களிலும், என் ஓய்வு நேரங்களிலும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்.

அயலகத்தில் பணிபுரியும் தன் அருமை கணவனை நினைத்து அன்பு மனைவி பாடுவது போல அமைந்திருக்கும் அப்பாடல் வரிகளும், இசை கோர்ப்பும் தனித்துவமாக அமைந்திருப்பது மனதை மயக்குகிறது. கணவனைப் பிரிந்து இருக்கக்கூடிய பெண்ணின் ஏக்கத்தையும், வலியையும் தன் மென் அழகு தமிழால் அப்படியே வடித்திருக்கின்ற அக்கா தாமரை அவர்களுக்கும், அவ்வரிகளுக்கு ஆகச்சிறந்த இசையால் உயிரூட்டியிருக்கும் நம் தலைமுறையின் ஈடுஇணையற்ற இசைத்தமிழன் அன்புஇளவல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கும் எனது பாராட்டுகளும், வாழ்த்துகளும்! உங்கள் பணி தொடரட்டும் தொடரட்டும்!

அக்கா தாமரை அவர்களுக்கு இதுபோன்ற மிகச் சிறந்த பாடல்கள் எழுதுவதற்கான வாய்ப்பைத் தொடர்ந்து வழங்கிவரும் இயக்குநர் அன்புச்சகோதரன் கௌதம் மேனன் அவர்களுக்கும், இப்படத்தைத் தயாரித்துள்ள சகோதரர் ஐசரி கணேஷ் அவர்களுக்கும் எனது பேரன்பும், வாழ்த்துகளும்..!” எனப் பாராட்டியுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

‘ரஜினியின் ஆசிர்வாதம்… விஜய்யின் விருந்து…’ சென்னை ஷூட்டிங் பற்றி ஷாருக் கான் ட்வீட்