Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏழு தலைமுறைக்கும் ’’அன்னைய்யா ‘’புகழ் வாழும் – எஸ்.பி.பியின் நீண்டகால நண்பர் கமல் டுவீட்

Webdunia
வெள்ளி, 25 செப்டம்பர் 2020 (16:00 IST)
இந்தியத் திரையுலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் தன் காந்தர்வக் குரலால் ஐம்பது வருட காலம் தனி சாம்ராஜ்யமே நடத்திவந்து,அனைத்து மக்களின் காதுகளையும் குளிர்வித்து, இதயத்தை இதயமாக்கிய எஸ்.பி.பி இன்று நண்பகலில் காலமானார்.

தமிழ் சினிமாவிலிருந்து  தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்படும் சினிமாக்களுகு கமல்ஹாசன் குரலாக ஒலித்தது எஸ்.பி.பிதான். அப்படியொரு ஒற்றுமை இருவருக்கும்.

ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள பாசம் எத்தனை அந்நியோன்யம் என்பது கமல் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் அவரது காலில் கமல்ஹாசன் ஆசீர்வாதம் பெறுவார்.

ஒருமுறை எஸ்.பி.பி, கமல்ஹாசனின் பாடும் திறத்தைப் பற்றிக் கூறும்போது, ‘’கமல்ஹாசன் உச்சஸ்ய்தாயியில் பாடும்போது, நெற்றியில் நரம்புகள் புடைந்திருக்கும்…’’ என்று பெருமையுடன் குறிப்பிட்டார்.

எஸ்.பி.பியின் மறைவு குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில்,
அன்னைய்யா S.P.B அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு. ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

க்யூட்னெஸ் ஓவர்லோடட் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ்!

கிளாமர் லுக்கில் ஸ்டன்னிங்கான ஆல்பத்தை வெளியிட்ட ராஷி கன்னா!

எனக்குப் பல முகங்கள் உண்டு… என் பயோபிக்குக்கு டைட்டில் இதுதான் – சாய்பல்லவி ஓபன் டாக்!

ஏ ஆர் ரஹ்மான் இளையராஜாவிடம் உதவியாளராக பணியாற்றவில்லை- ஜேம்ஸ் வசந்தனின் பதிவு!

சிம்பு & வெற்றிமாறன் இணையும் படம் ‘வடசென்னை இரண்டாம் பாகமா’?

அடுத்த கட்டுரையில்
Show comments