Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் பாலிவுட்டில் சத்யராஜ்… சல்மான் கானுக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தம்!

மீண்டும் பாலிவுட்டில் சத்யராஜ்… சல்மான் கானுக்கு வில்லனாக நடிக்க ஒப்பந்தம்!

vinoth

, செவ்வாய், 28 மே 2024 (11:32 IST)
தர்பார் தோல்விக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் எந்த படமும் இயக்காமல் இருந்த ஏ ஆர் முருகதாஸ், இப்போது சிவகார்த்திகேயனை வைத்து தனது அடுத்த படத்தைத் தொடங்கியுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் சென்னையில் தொடங்கியது. படத்தில் கதாநாயகியாக ருக்மினி வசந்த் நடிக்க அனிருத் இசையமைக்கிறார்.

இந்த படத்தை முடித்ததும் முருகதாஸ் அடுத்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சல்மான் கானோடு இணைந்து சிக்கந்தர் என்ற படத்தை உருவாக்க உள்ளார். இந்த படத்தின் பட்ஜெட் 400 கோடி ரூபாய்க்கு மேல் என சொல்லப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் படத்தின் பெரும்பகுதியை படமாக்க முருகதாஸ் திட்டமிட்டுள்ளாராம். 

இந்த படம் அடுத்த ஆண்டு ரம்ஜானுக்கு ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது. அதனால் விரைவில் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க சத்யராஜ் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஷாருக் கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் சத்யராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரண்மனை 4 பிரம்மாண்ட வெற்றியால் சுந்தர் சி எடுத்த முடிவு.. கலகலப்பு 3 ஷூட்டிங் தள்ளிவைப்பு!