Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்ப் படத்துக்கு முதலில் நான்தான் இசையமைப்பாளர்… என்னை விரட்டிவிட்டார்கள்- சந்தோஷ் நாராயணன் ஜாலி பேச்சு!

vinoth
புதன், 4 டிசம்பர் 2024 (11:07 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். குறும்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்குள் பிரவேசித்த பல இயக்குனர்களின் படங்களுக்கு இசையமைத்து பின்னர் ரஜினியின் காலா மற்றும் கபாலி ஆகிய படங்களுக்கு இசையமைத்து பிரபலமானார். தற்போது தமிழைத் தாண்டியும் தெலுங்கு சினிமாவிலும் கால்பதித்து கலக்கி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த சூதுகவ்வும் 2 படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது “சிவா எனக்கு நெருங்கிய நண்பராக இருந்தார். நான் இசையமைப்பாளர் ஆக முயற்சி செய்து கொண்டிருந்த போது சிவாதான் மோட்டிவேஷனாக பேசுவார். என் அப்பா அம்மாவிடம் எல்லாம் நான் பெரிய இசையமைப்பாளராக வருவார் என பேசுவார்.

முதலில் அவரின் ‘தமிழ்ப் பட’த்துக்கு இசையமைத்தேன். ஆனால் என் பாடல்கள் அவருக்குப் பிடிக்கவில்லை. அதனால் அவர்கள் ‘நீயாகவே இந்த படத்தில் இருந்து ஓடிடு’ என்பது மாதிரி சொன்னார்கள். அதனால் நான் அந்த படத்தில் இருந்து வெளியேறினேன்.” எனப் பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் புகைப்பட தொகுப்பு!

கிளாமர் க்யூன் யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கண்கவர் போட்டோஷூட் ஆல்பம்!

கார்த்தி நடிக்கும் மார்ஷல்.. சாய் அப்யங்கர் இசை – முதல் பார்வை போஸ்டர் வெளியீடு!

கேன்சர் இருப்பது தெரிந்தும் அவரை திருமணம் செய்துகொண்டேன்… விவாகரத்துக் குறித்து மனம் திறந்த விஷ்ணுவிஷால்!

96 படத்தின் கதையை நான் தமிழ் சினிமாவில் எடுக்க எழுதவேயில்லை… இயக்குனர் பிரேம்குமார் பகிர்வு!

அடுத்த கட்டுரையில்
Show comments