Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

யாருனாலும் வாங்க… எஞ்சாய் எஞ்சாமி சர்ச்சை குறித்து சந்தோஷ் நாராயணன்!

யாருனாலும் வாங்க… எஞ்சாய் எஞ்சாமி சர்ச்சை குறித்து சந்தோஷ் நாராயணன்!
, செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (15:07 IST)
எஞ்சாய் எஞ்சாமி பாடல் தொடர்பான எவருடனும் விவாதிக்க நான் தயார் என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.


பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசை மற்றும் தயாரிப்பில் எஞ்சாய் எஞ்சாமி பாடல் யு டியூபில் வெளியானது.  இந்த பாடலுக்கான வரிகளை தெருக்குரல் அறிவு எழுத தீ அவரே இணைந்து பாடி இருந்தனர். குரலில்  ஏ ஆர் ரஹ்மானின் மாஜா ஸ்டுடியோவின் இணையப்பக்கத்தில் இந்த பாடல் வெளியானது.

வெளியானதில் இருந்தே மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த பாடல் திரையுலகினர் பலரின் கவனத்தை ஈர்த்து பாராட்டுகளை பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த செஸ் ஒலிம்பியாட் பாடலின் தொடக்க விழாவில் இந்த பாடல் பாடப்பட்டது. ஆனால் அதில் அறிவு கலந்துகொள்ளவில்லை.

பாடகி தீ கலந்துகொண்ட நிலையில் அறிவின் வரிகளை மாரியம்மாள் பாடினார். அப்போதே இதுகுறித்து சர்ச்சைகள் கிளம்பின. பலரும் அறிவு ஏன் கலந்துகொள்ளவில்லை என கேள்வி எழுப்பி இருந்தனர். இது குறித்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளதாவது,

எஞ்சாய் எஞ்சாமி பாடலின் மொத்த வருமானத்தைம், உரிமைகளையும் நான், தீ, அறிவு என மூன்று பேரும் சமமாகப் பகிர்ந்து கொண்டோம். அறிவு அமெரிக்காவில் இருந்ததால் செஸ் ஒலிம்பியாட் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை என இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் எஞ்சாய் எஞ்சாமி பாடல் தொடர்பான எவருடனும் விவாதிக்க நான் தயார் எனவும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்னமும் முடியாத கோப்ரா கிராபிக்ஸ் பணிகள்… கடைசியா ஒரு தேதிய சொன்ன இயக்குனர்!