Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓடாத படத்தை முதல் நாள் படப்பிடிப்பிலேயே கணித்துவிடுவேன் – சந்தானம் பகிர்ந்த தகவல்!

vinoth
வெள்ளி, 16 மே 2025 (15:07 IST)
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு சர்வைவல் ஆகிக் கொண்டிருக்கிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனால் சந்தானம் ஹீரோவாக நடித்து சம்பாதித்ததை விட இழந்ததுதான் அதிகம் என சொல்லப்படுகிறது. ஏனென்றால் அவர் ஹீரோவாக நடித்த படங்கள் நடித்த பெருவாரியானப் படங்களை அவரே தயாரித்திருந்தார்.

அவர் நடித்து வரும் ‘தில்லுக்கு துட்டு’ வகைப் படங்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகின்றன. அந்த வரிசையில் அவர் நடித்த 'DD நெக்ஸ்ட் லெவல்' என்ற திரைப்படம் இன்று  வெளியாகியுள்ளது. இந்த படத்தில் இடம் பெற்ற 'கோவிந்தா' என்ற பாடல் சர்ச்சையை உருவாக்கிய நிலையில் அது நீக்கப்பட்டு ரிலீஸாகியுள்ளது.

இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில் தான் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை ஷூட்டிங்கின் முதல் நாளிலேயே கணித்துவிடுவேன் எனக் கூறியுள்ளார். அது சம்மந்தமாக பேசும்போது “ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தின் ஷூட்டிங்கில் முதல் நாளிலேயே நான் இயக்குனரிடம் சொன்னேன். என்னுடைய கரீனா சோப்ரா கெட்டப் அவ்வை சண்முகி போல தத்ரூபமாக இருந்தால்தான் அது வொர்க் ஆகும் என்று. ஆனால் தயாரிப்பாளர்கள் அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. என்னால் வேறு ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால் அவர்கள் சொன்னதை நான் நடித்துக் கொடுத்துவிட்டு வந்தேன். அந்த மாதிரியான நேரங்களில் நாம் அதைதான் செய்யமுடியும்” எனக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆட்மேன் - ஆண்டவர் தரிசனத்துக்கு ரெடியா? நாளை ‘Thug Life’ ட்ரெய்லர்!

தனுஷ், சிம்பு படங்களின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

என்னால சண்முகபாண்டியனுக்கு ‘No’ சொல்ல முடியல… படை தலைவன் நிகழ்ச்சியில் சசிகுமார் உருக்கம்!

ஜெயிலர் 2 படத்தில் ஷாருக் கான் நடிக்கிறாரா?.. தீயாய்ப் பரவும் தகவல்!

விஜய் ஆண்டனி படத்தின் தலைப்பு மாற்றம்… ரிலீஸ் தேதி அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments