Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கர்ப்பமாக இருக்கும் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சய்!

கர்ப்பமாக இருக்கும் மனைவியின் புகைப்படத்தை வெளியிட்ட சஞ்சய்!
, திங்கள், 17 பிப்ரவரி 2020 (17:50 IST)
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா-ராணி சீரியல் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்று கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் அந்த சீரியல் முடிந்தது. இந்த சீரியலில் செம்பா-கார்த்திக் வேடத்தில் நடித்ததன் மூலம் ஆல்யா மானசா-சஞ்சீவ் இருவரும் நிஜ காதலர்களாக மாறினர். 
 
கடந்த சில வருடங்களாக காதல் ஜோடியாக இருந்து வந்த இவர்கள் அடிக்கடி அவுட்டிங் செல்வது , இருவரும் சேர்ந்து பேட்டி கொடுப்பது என இருந்து வந்த நிலையில் சமீபத்தில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்துகொண்டு மணவாழ்க்கையை மகிழ்ச்சியுடன் துவங்கினர். அதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு  முன்னர் அவர் கர்ப்பமாக இருப்பதாக சஞ்சய் கூறினார். 
 
இந்நிலையில் முதல் முறையாக கர்ப்பமாக இருக்கும் மனைவியை தனது மேடையில் அமரவைத்து எடுத்துக்கொண்ட புகைப்படமொன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள சஞ்சய் இவர்கள் தான் என் வாழ்க்கை என கூறியுள்ளார். இந்த அழகிய தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

They are my life


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நாங்க எதையும் மறைக்க போறதில்லை!: வெளிப்படையாக வீடியோ வெளியிட்ட ரம்யா நம்பீசன்!