Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மலையாளம், தெலுங்கை அடுத்து கன்னட சினிமாவிலும் பாலியல் தொல்லை: திடுக் புகார்..!

Mahendran
வியாழன், 19 செப்டம்பர் 2024 (14:03 IST)
மலையாள சினிமாவில் பாலியல் தொல்லைகள் உள்ளன என்பது ஹேமா கமிஷன் அறிக்கையால் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா துறைகளில் ஒருசில நடிகைகள் மற்றும் பெண் கலைஞர்கள் தொடர்ந்து பாலியல் குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில், கன்னட சினிமாவிலும் பாலியல் தொல்லைகள் நிலவுவதாக நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி கன்னட மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
கன்னட திரைப்பட துறையில் பெண் கலைஞர்களுக்கு தனித்துவமான பாதுகாப்பு அமைப்புகள் இல்லை என்பதையும், தனது அறக்கட்டளையின் மூலம் ஒரு சுதந்திரமான அமைப்பை உருவாக்குவோம் என்றும் சஞ்சனா கூறியுள்ளார். 
 
மேலும், திரைத்துறையில் புதிய முகங்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, "சான்டல்வுட் வுமன் ஆர்டிஸ்ட் அசோசியேசன்" என்ற அமைப்பை உருவாக்க முனைவதாகவும், கன்னட திரைத்துறையில் பெண்களின் உரிமை மற்றும் பாதுகாப்பை முன்னிட்டு நடவடிக்கை எடுப்போம் என்றும் அவர் தெரிவித்தார். 
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மாடர்ன் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷான புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லாஸ்லியா!

கிளாமர் லுக்கில் ஸ்ரேயாவின் அழகிய க்ளிக்ஸ்..!

சைலண்ட் ஹிட்டடித்த ‘லெவன்’ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு!

குபேரா படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்த நாகார்ஜுனா!

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

அடுத்த கட்டுரையில்