Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆர்யாவுக்காக மன்னிப்பு கேட்ட நடிகை சங்கீதா

Advertiesment
Sangeetha
, சனி, 28 ஏப்ரல் 2018 (08:24 IST)
ஆர்யா செய்த செயலுக்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் நடிகை சங்கீதா.

 
கலர்ஸ் தமிழ் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’. ஆர்யாவுக்கு ஏற்ற பெண்ணைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியின் முடிவில், ஆர்யா எந்தப் பெண்ணையும் தேர்ந்தெடுக்காமல் ஜகா வாங்கினார். ‘ஒருவரைத் தேர்ந்தெடுத்தால் மற்ற இருவருக்கும் வருத்தம் ஏற்படும்’ என்று உப்புச்சப்பில்லாத ஒரு காரணத்தைச் சொன்னார். இதனால், அந்த நிகழ்ச்சியைப் பலரும் விமர்சித்துள்ளனர்.

 
இந்நிலையில், அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகை சங்கீதா, “எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் ரசிகர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆர்யாவின் முடிவு எல்லாருக்குமே அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. திட்டமிட்டு ரசிகர்களை ஏமாற்ற வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல, மன்னித்து விடுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திறமை இருந்தால் அட்ஜஸ்ட் செய்ய தேவையில்லை: அடா சர்மா