Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என் படத்தை வாங்க ஆள் இல்லை… அதனால்தான் படம் இயக்குவதில்லை – சமுத்திரகனி கோபம்!

என் படத்தை வாங்க ஆள் இல்லை… அதனால்தான் படம் இயக்குவதில்லை – சமுத்திரகனி கோபம்!

vinoth

, வியாழன், 14 மார்ச் 2024 (14:52 IST)
இயக்குனர் சமுத்திரக்கனி இப்போது தெலுங்கில் பிஸியான நடிகராகி விட்டார்.  அவர் இல்லாத பெரிய நடிகர்களின் படங்களே இல்லை எனும் அளவுக்கு எல்லா படங்களிலும் வில்லனாக நடித்து கலக்கி வருகிறார். அவர் 2021 ஆம் ஆண்டு ஜி 5 ஓடிடி தளத்துக்காக அவர் இயக்கிய படம்தான் விநோயத சித்தம். நேரடியாக ஓடிடியில் ரிலீஸாகி பாராட்டுகளைக் குவித்த இந்த திரைப்படம் சமீபத்தில் தெலுங்கில் ப்ரோ என்ற பெயரில் பவண் கல்யாண் நடிப்பில் ரீமேக் செய்தார்.

அதையடுத்து அவர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள யாவரும் வல்லோரே திரைப்படம் நாளை வெளியாகிறது. இதற்கான ப்ரமோஷன் பணிகளில் அவர் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில் அவரிடம் இப்போது ஏன் தமிழில் படங்கள் இயக்குவதில்லை என்று கேட்கப்பட்டது.

அதற்கு கோபமாக பதிலளித்த சமுத்திரக்கனி “அப்பா என்ற படத்தை எடுத்துவிட்டு, அதை ரிலீஸ் செய்ய நான் பட்டபாடு எனக்கு தெரியும். சிறு பட்ஜெட் படங்களை பார்க்க ரசிகர்கள் தயாராக இருக்கிறார்களோ இல்லையோ அதை ரிலீஸ் செய்ய இங்குள்ளவர்கள் தயாராக இல்லை. மலையாள படமான மஞ்ஞும்மள் பாய்ஸ் இங்கு ஓடுகிறது. ஆனால் என் படத்தை வாங்க் ஆள் இல்லை. அதனால் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு யார் நடிக்க அழைத்தாலும் சென்று நடிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விடுதலை படத்தில் வாத்தியாராக நடிக்க வெற்றிமாறன் என்னைதான் கேட்டார்.. சீமான் பகிர்ந்த தகவல்!