Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிஷ்கின் அப்படி பேசியதற்காக நான் போன் பண்ணி திட்டினேன்… பிரபல இயக்குனர் பகிர்ந்த தகவல்!

vinoth
சனி, 22 பிப்ரவரி 2025 (11:00 IST)
தமிழ் சினிமாவில் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே மற்றும் நந்தலாலா உள்ளிட்ட பல முக்கியமானப் படங்களை எடுத்து பிரபலம் ஆனவர் இயக்குனர் மிஷ்கின். அவர் நடிகராகவும் சில படங்களில் நடித்துள்ளார். சினிமாவுக்கு வெளியிலும் திரைப்படங்கள் குறித்த பாடங்கள் எடுப்பது என பலவிதங்களில் ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் நடந்த பாட்டல் ராதா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசும்போது படத்தைப் பற்றி பேசாமல் வேறு என்னென்னவோ பேசியும் சில இடக்கடக்கரலான வார்த்தைகளை வெளிப்படையாகப் பேசியும் முகம் சுளிக்க வைத்தார். இதனால் அவர் மேல் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து மற்றொரு பட நிகழ்ச்சியில் அவர் மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். மேலும் அவர் தான் சினிமாவில் இருந்து விரைவில் விலகவுள்ளதாகவும் பேசியிருந்தார்.

அது பற்றி சமீபத்தில் இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில் “நான் மிஷ்கின் அப்படி பேசியதும் அவருக்கு போன் செய்து திட்டினேன். ஏண்டா நீ என்னென்னலாம் தமிழ் சினிமாவில் பண்ணிருக்க தெரியுமா? நீ பாட்டுக்கு சினிமாவ விட்டுப் போறேன்னு சொல்ற!’ என்று கேட்டதாகக் கூறியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆர்யா நடிக்கும் மிஸ்டர் எக்ஸ் படம் பற்றி வெளியான முக்கிய அப்டேட்!

பாலச்சந்தர் பட டிரைலரை இப்போது வெளியிட்டால் ‘பேட் கேர்ள்’ டிரைலரை விட எதிர்ப்பு அதிகமாகும்- ஆர் கே செல்வமணி!

கங்குலி பயோபிக்கில் நடிக்கப் போவது இவர்தான்… வெளியான தகவல்!

அட்லி & சல்மான் கான் இணையும் படம் நிறுத்திவைப்பு?... பின்னணி என்ன?

கடந்த காலம் எப்போதும் உறங்காது… தொடங்கியது ‘த்ருஷ்யம் 3’ படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments