Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அருண் மாதேஸ்வரன் இயக்கும் இந்தி படத்தில் நடிக்கும் அக்‌ஷய் குமார்?

vinoth
சனி, 22 பிப்ரவரி 2025 (10:55 IST)
இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் ‘இளையராஜா’ என்ற பெயரில் உருவாகவுள்ளதாக கயந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை இளையராஜாவோடு இணைந்து கனெக்ட் மீடியா தயாரிப்பதாகவும், தனுஷ் இளையராஜாவாக நடிக்க, அருண் மாதேஸ்வரன் இயக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. ஆனால் அதன் பிறகு ஒரு ஆண்டு ஆகிவிட்ட நிலையிலும் இப்போது வரை ஷூட்டிங் தொடங்கவில்லை.

தற்போது இந்த படத்தைத் தொடங்குவதில் சிக்கல் எழுந்து கிடப்பில் போடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் இப்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் ஒரு இந்திப் படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகளில் அவர் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் அருண்  மாதேஸ்வரன் இயக்கும் இந்தி படத்தில் அக்‌ஷய் குமார் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. விரைவில் இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முன்பதிவிலேயே இவ்வளவு வசூலா? கில்லிக்கு அப்புறம் சச்சினும் கல்லா கட்டுதே!

கேபிஒய் பாலா சினிமா கதாநாயகன் ஆகிறார். அதிகாரபூர்வ அறிவிப்பு..!

க்ரீத்தி ஷெட்டியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்… இன்று முதல் மீண்டெழுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments