Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சமுத்திரக்கனி பட தயாரிப்பாளரை தாக்கிய ரவுடிகள்!

சமுத்திரக்கனி பட தயாரிப்பாளரை தாக்கிய ரவுடிகள்!
, புதன், 29 மார்ச் 2017 (15:52 IST)
சமுத்திரக்கனி தயாரித்து, எழுதி, இயக்கி, நடித்த படம் அப்பா. இதில் அப்பாவாக நடித்திருந்தார் சமுத்திரக்கனி. இந்நிலையில்  அவர் அப்பா படத்தை மலையாளத்தில் ரீமேக் செய்யும் படமான இதத்திற்கு ‘ஆகாச மிட்டாய்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.


 
இப்படத்தில் ஜெயராம் ஹீரோவாக நடிக்க, வரலட்சுமி அவர் மனைவியாக நடிக்க உள்ள அந்த படத்தின் தொடக்க விழா நடந்தது. இந்நிலையில், இப்படத்தில் இருந்து வரலட்சுமி திடீரென விலகியுள்ளதாக செய்திகள் வெளியானது.
 
ஜெயராம் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமான வரலட்சுமி படத்தை விட்டு வெளியேறினார். இந்நிலையில் நேற்று இரவு 10 மணிக்கு  படப்பிடிப்பு கொச்சியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்தது. அப்போது குடிபோதையில் அங்கு வந்த 10 ரவுடிகள் படத்தின்  தயாரிப்பாளரான மஹா சுபைரை தாக்கினர். மேலும் பொரடக்ஷன் கன்ட்ரோலர் பாதுஷா உள்ளிட்ட படக்குழுவினரும்  தாக்கப்பட்டனர்.
 
இந்த தாக்குதலில் சுபைரின் தலை மற்றும் காதில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

லிவ்விங் டுகெதருக்கு பிறகு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ள வெற்றி நடிகர்!