Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‘மெர்சல்’ டப்பிங்கைத் தொடங்கிய சமந்தா

‘மெர்சல்’ டப்பிங்கைத் தொடங்கிய சமந்தா
, வெள்ளி, 29 செப்டம்பர் 2017 (11:49 IST)
‘மெர்சல்’ படத்தில் தன்னுடைய போர்ஷனுக்கான டப்பிங்கை பேசத் தொடங்கியுள்ளார் சமந்தா.
 


 

விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் ‘மெர்சல்’. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தில், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. இது அவர்களுக்கு நூறாவது படம்.

தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது. எனவே, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகின்றன.
விஜய், தன்னுடைய டப்பிங்கை முடித்துவிட்டு, ஓய்வுக்காக பல்கேரியா சென்றுவிட்டார். தற்போது, சமந்தா தன்னுடைய போர்ஷனுக்கான டப்பிங்கை பேசத் தொடங்கியுள்ளார். வெகு விரைவிலேயே அவர் டப்பிங்கை முடித்துவிடுவார் என்கிறார்கள். காரணம், இன்னும் சில நாட்களில் அவருக்கும், நாக சைதன்யாவுக்கும் திருமணம் நடைபெற உள்ளது. எனவே, அவசரம் அவசரமாக டப்பிங் பேசி வருகிறார் என்கிறார்கள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷுக்கு ஜோடியான ‘பிரேமம்’ ஹீரோயின்