Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விவாகரத்து அறிவிப்புக்கு பின் சமந்தாவின் முதல் படப்பிடிப்பு!

விவாகரத்து அறிவிப்புக்கு பின் சமந்தாவின் முதல் படப்பிடிப்பு!
, திங்கள், 29 நவம்பர் 2021 (17:01 IST)
தமிழ் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகையாக இருந்து வரும் சமந்தா சமீபத்தில் தனது கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார்
 
விவாகரத்துக்கு பின்னர் அவர் வட இந்திய சுற்றுலா சென்றார் என்பது குறித்த புகைப்படங்களை பதிவு செய்து வந்தார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் விவாகரத்துக்குப் பின் தற்போது முதல் முறையாக படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா என்ற திரைப்படத்தில் ஒரு பாட்டுக்கு சமந்தா நடனம் ஆட இருப்பதாக செய்திகள் வெளியானது. அந்த பாடலின் படப்பிடிப்பில் தான் தற்போது சமந்தா உள்ளார் என்பதும் இன்னும் ஒரு வாரம் இந்த பாடலின் படப்பிடிப்பு நடைபெறும் என்றும் கூறப்படுகிறது
 
இந்த பாடலில் நடனம் ஆடி நடிப்பதற்காக அவர் ஒரு படத்திற்கு உண்டான சம்பளத்தை பெற்று உள்ளதாகவும் கூறப்படுகிறது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொதுவெளியில் ஸ்க்ரீன் கட்டி திரையிடப்பட்ட ‘ஜெய்பீம்’