Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராதே பட ரிலீஸ் சிக்கல்… 40 கோடி ரூபாயை விட்டுத்தந்த சல்மான் கான்!

ராதே பட ரிலீஸ் சிக்கல்… 40 கோடி ரூபாயை விட்டுத்தந்த சல்மான் கான்!
, புதன், 12 மே 2021 (11:57 IST)
ராதே படத்தின் ரிலீஸில் ஏற்பட்டுள்ள சிக்கலால் தனது தரப்பில் இருந்து 40 கோடி ரூபாயை சல்மான் கான் விட்டுக்கொடுத்துள்ளாராம்.

பிரபுதேவா சல்மான் கூட்டணி பாலிவுட்டின் வெற்றிக் கூட்டணியாக கருதப் படுகிறது. இவர்களின் கூட்டணி நான்காவது முறையாக ராதே திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளது. இந்த படத்தில் திஷா பட்டாணி, ரந்தீப் கூடா மற்றும் தமிழ் நடிகர் பரத் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் கொரிய திரைப்படம் ஒன்றின் ரீமேக் ஆகும். இந்த படத்தின் பணிகள் எல்லாம் முடிந்து ரிலீஸுக்கு தயாராக இருந்த நிலையில் கொரோனா அச்சம் காரணமாக இன்னும் ரிலீஸாகவில்லை. இதனால் படம் ஓடிடியில் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டது. இதை மறுத்துள்ள சல்மான் கான் ரம்ஜான் பண்டிகையை ஒட்டி மே  13 ஆம் தேதி ரிலிஸாகும் என அறிவித்திருந்தனர். ஆனால் இப்போது கொரோனா இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருவதால் படம் சொன்ன தேதியில் ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வி எழுந்தது.

இதுபற்றி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சல்மான் கான் ‘இந்த ஈகை திருநாளுக்கு ராதே திரைப்படத்தை ரிலிஸ் செய்ய திட்டமிட்டு இருந்தோம். ஆனால் ஊரடங்கு தொடர்ந்தால் அடுத்த ரம்ஜான் பண்டிகை யன்று தான் ரிலீஸாகும்’ எனக் கூறி இருந்தார். ஆனால் இப்போது ராதே திரைப்படம் ரம்ஜான் பண்டிகை அன்று ஓடிடி மற்றும் திரையரங்கு என இரண்டு தளங்களிலும் ரிலீஸாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இப்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் திரையரங்குகளில் பெரும்பாலான இடங்களில் ரிலீஸ் செய்ய முடியாது. இந்நிலையில் பெரிய இழப்பு ஏற்படும் என்பதால் தனது தரப்பில் இருந்து 40 கோடி ரூபாயை சல்மான் கான் விட்டுக் கொடுத்துள்ளாராம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தங்கம் போல ஜொலிக்கும் ஆடையில் காஜல் அகர்வால்!