Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலிவுட் படங்கள் தென்னிந்தியாவில் ஓடுவதில்லை…. சல்மான் கானுக்கு யாஷ் பதில்!

Webdunia
வியாழன், 14 ஏப்ரல் 2022 (09:44 IST)
சல்மான் கான் தெரிவித்த கருத்து கேஜிஎப் ஹீரோ யாஷ் பதிலளித்துள்ளார்.

சமீபகாலமாக பாகுபலி, கேஜிஎப், புஷ்பா மற்றும் ஆர் ஆர் ஆர் ஆகிய படங்கள் பாலிவுட்டில் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்று ஹிட்டாகின. இதையடுத்து வரிசையாக தென்னிந்திய படங்கள் இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியாகின்றன.

இதுபற்றி பேசிய பாலிவுட் சூப்பர் ஸ்டார் நடிகர் சல்மான் கான் ‘தென்னிந்திய படங்கள் இங்கு ஓடுகின்றன. ஆனால் பாலிவுட் படங்கள் தென்னிந்தியாவில் ஓடுவதில்லை’ என வருத்தம் தெரிவித்திருந்தார்.  அதற்கு யாஷ் அளித்துள்ள பதிலில் ‘இதை அப்படி பார்க்க வேண்டியதில்லை. எங்கள் படங்களும் வரவேற்பைப் பெறவில்லை. எங்கள் பாணி சினிமாவை மக்கள் அறிந்துள்ளனர். ராஜமௌலியின் பாகுபலி படம் இதை ஆரம்பித்தது. பின்னர் கேஜிஎப் உள்ளிட்ட படங்கள் அதை தொடர்ந்து வருகின்றன. பாலிவுட் படங்கள் தென்னிந்திய மக்களையும் தொடர்புபடுத்தும் விதமாக உருவானால் அவை இங்கும் வெற்றி பெறும்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

அடுத்த கட்டுரையில்
Show comments