Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பெண்கள் படுக்கைக்கு மட்டுமே லாயக்கு. 70 வயது நடிகரின் சர்ச்சை பேச்சு

பெண்கள் படுக்கைக்கு மட்டுமே லாயக்கு. 70 வயது நடிகரின் சர்ச்சை பேச்சு
, புதன், 24 மே 2017 (04:16 IST)
பெண்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டு, சமூகத்தில் பெண்கள் நல்ல நிலையில் உயர்ந்து கொண்டிருக்கும் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் இந்த நேரத்தில் பெண்கள் படுக்கைக்கு மட்டுமே லாயக்கு. அவர்களல் மன அமைதி பாதிக்கப்படுமா? என்பது எனக்கு தெரியாது என்று சர்ச்சைக்குரிய வகையில் பிரபல தெலுங்கு நடிகர் சலபதி நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார்.



 


நடிகை சமந்தா விரைவில் திருமணம் செய்யப்போகும் நாகசைதன்யா நடிக்கும் புதிய படம் ஒன்றின் தொடக்கவிழா நேற்று ஐதராபாத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட 73 வயது சலபதிராவ் என்பவர் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதை கண்டு விழாவுக்கு வந்திருந்த அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

பெண்களால் மன அமைதி கெடும் என்று நாக சைதன்யா படத்தில் ஒரு வசனம் வரும். அது உண்மையா என்று எனக்கு தெரியாது. ஆனால் பெண்கள் படுகைக்கு மட்டுமே மிகச் சரியானவர்கள் என்று சலபதி ராவ் இந்த விழாவில் பேசினார். சலபதி ராவின் இந்த சர்ச்சை பேச்சுக்கு பெண்கள் அமைப்புகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தனுஷ், சிம்புவுடன் மோத முடிவெடுத்த விஜய்சேதுபதி